காலஞ்சென்ற பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஜயலத் ஜயவர்தனவின் இறுதிக்
கிரியைகள் ஜா-எல வெலிகம்பிட்டிய ரோமன் கத்தோலிக்க மயானத்தில் இன்று
பிற்பகல் இடம்பெற்றது.
அன்னார் சிங்கப்பூரிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று
வந்த நிலையில் கடந்த 30ஆம் திகதி தகது 60வது வயதில் காலமானார்.
வெலிகம்பிட்டிய புனித அனா குறுக்கு வீதியிலுள்ள அன்னாரது வீட்டில்
வைக்கப்பட்டிருந்த பூதவுடலுக்கு மதத் தலைவர்கள், ஆளும், எதிர்க்கட்சி
உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர். நேற்று பிற்பகல் கத்தோலிக்க தேவாலயத்தில் இடம்பெற்ற மத நிகழ்வுகளின் பின்னர் அன்னாரது பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
0 comments:
Post a Comment