அநுராதபுரம் விமானப்படை முகாமில் உள்ள விமானப்படை விடுதி அறை ஒன்றில்
இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (03)
அதிகாலை 12.40 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரதாவன பிரதேசத்தில்
வசிக்கும் 31 வயதான விமானப்படை வீரர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக
அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். இவ் வெடிப்பு சம்பவம் தொடர்பில்
அநுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 comments:
Post a Comment