Home » , » இலங்கையில் 13ஏ சட்ட பிரிவில் மாற்றம் செய்ய அரசு திட்டம்

இலங்கையில் 13ஏ சட்ட பிரிவில் மாற்றம் செய்ய அரசு திட்டம்

Written By EGK NEWS on Wednesday, June 5, 2013 | 7:01 PM

இலங்கையில், வட மாகாண தேர்தலுக்கு முன்னதாக, 13வது சட்டப் பிரிவில் பல்வேறு திருத்தங்களை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
வட மாகாணத்தில் வரும், செப்டம்பர், மாதம் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போதுள்ள 13ஏ சட்டம், தமிழர் பகுதிகளுக்கு அதிக அதிகாரம் வழங்க வழி செய்கிறது.இந்த சட்டத்தை ரத்து செய்யும்படி, இலங்கை ஆளும் கூட்டணியில் உள்ள, ஜாதிக ஹெல உறுமய என்ற கட்சி, பார்லிமென்டில் தீர்மானம் கொண்டு வர உள்ளது. எனவே, வட மாகாண தேர்தலுக்கு முன்னதாக, 13ஏ சட்டத்தில் திருத்தம் செய்ய, அமைச்சரவை திட்டமிட்டுள்ளது.

இலங்கை அரசின் இந்த திட்டத்துக்கு, தமிழ் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. 13ஏ சட்டப் பிரிவில் திருத்தம் செய்தால், தேர்தலை புறக்கணிக்கவும், தமிழ் கட்சிகள் முடிவு செய்துள்ளன.

0 comments:

Post a Comment

Design Your Site For Low Cost

YOUR ADVERTISE HERE