Home » , » வெடிமருந்து பயன்படுத்தி மாணிக்கக்கல் அகழ்வதற்கு முயன்ற 10 பேர் கைது

வெடிமருந்து பயன்படுத்தி மாணிக்கக்கல் அகழ்வதற்கு முயன்ற 10 பேர் கைது

Written By EGK NEWS on Thursday, June 6, 2013 | 6:28 PM

அனுமதிப் பத்திரத்தில் உள்ள விதிமுறைகளை மீறும் வகையில் மாணிக்கக்கல் அகழ்வதற்கு முயற்சித்த 10 பேர் மாத்தளை - நாவுல பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் பாரிய வெடிச்சத்தம் கேட்டதால் குறித்த பிரதேசத்திற்கு விரைந்துள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்கள் வெடிமருந்து பயன்படுத்தி கல்லொன்றை தகர்ப்பதற்கு முற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதற்கமைய 10 சந்தேகநபர்களையும் கைது செய்துள்ள பொலிஸார் அவர்களிடமிருந்த வெடி மருந்துகளையும் கைப்பற்றியுள்ளனர்.

0 comments:

Post a Comment

Design Your Site For Low Cost

YOUR ADVERTISE HERE