Home » , » விடுதலைப்புலிகளைக் கண்டு இலங்கை அச்சம்: அமெரிக்கா அறிக்கை

விடுதலைப்புலிகளைக் கண்டு இலங்கை அச்சம்: அமெரிக்கா அறிக்கை

Written By EGK NEWS on Thursday, June 6, 2013 | 6:25 PM

விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டும் மறுமலர்ச்சி பெறும் என்ற அச்சத்துடன் இலங்கை அரசு இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் தற்போதும் ஆயுதங்களை கைப்பற்றி வருவதாக இலங்கை அரசு கூறியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்திற்கு வெளிநாடுவாழ் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களே காரணம் என இலங்கை நினைப்பதாக தெரிவித்துள்ள அமெரிக்கா, கடந்த ஆண்டு விடுதலைப்புலிகளின் செயல்பாடு எதுவும் இல்லை என கூறியுள்ளது.
இலங்கையில் நடைபெறும் போராட்டங்களுக்கு விடுதலைப்புலிகளின் சர்வதேச ஆதரவாளர்கள் நிதியுதவி செய்வதாக கூறிவரும் ராஜபக்சே‌அரசு, அதனை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணொளி:http://puthiyathalaimurai.tv/video-gallery?video=4822

0 comments:

Post a Comment

Design Your Site For Low Cost

YOUR ADVERTISE HERE