Tuesday, June 18, 2013

குடிநீர்க் கட்டணம் அதிகரிக்கப்படாது

எக்காரணம் கொண்டும் குடிநீர்கட்ட ணம் அதிகரி க்கப் படா தென நீர்வழங் கல் வடிகாலமைப்பு அமைச்சரும் ஆளும்தரப்பு பிரதம கொரடாவுமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சு தொடர்பான விசேட அறிவித்தலொன்றை சபையில் வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது-

குடிநீர் கட்டணங்கள் 12 வீதத்தால் உயர்த்தப்பட்டுள்ளதாக ஐ.தே.க. எம்.பி. ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளhர்.

இது ஊடகங்களில் வெளியிடப்பட் டுள்ளது. 2009 ம்ஆண்டின் பின் 2012 ஒக்டோபரிலே குடிநீர் கட்டணம் சிறிது அதிகரிக்கப்பட்டது.

அரசாங்கம் திருட்டுத்தனமாக குடிநீர் கட்டணத்தை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது தூக்கத்தில் இருந்து எழும்பியே ஐ.தே.க. எம்.பி. இவ்வாறு கூறியுள்ளார்.

ஒரு அலகு குடிநீருக்காக நாம் 44 ரூபா செலவிடுகிறோம். 5 ரூபாவிற்கு ஒரு அலகு நீர் விற்கப்படுகிறது. நீர் கட்டணத்தை உயர்த்தும் தேவை அரசாங்கத்திற்கு இல்லை என்றும் அமைச்சர் கூறினார்

No comments:

Post a Comment