Home » » விடுதலை புலி உறுப்பினர் தப்பிச் செல்வதற்கு உதவிய சிறை அதிகாரிகளிடம் தீவிர விசாரணை!

விடுதலை புலி உறுப்பினர் தப்பிச் செல்வதற்கு உதவிய சிறை அதிகாரிகளிடம் தீவிர விசாரணை!

Written By EGK NEWS on Sunday, June 2, 2013 | 8:55 AM

கடந்த வெசாக் தினத்தின் போது தப்பிச்சென்ற விடுதலைப்புலி உறுப்பினர் தொடர்பில் தற்போது இரண்டு சிறைச்சாலை அதிகாரிகளிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரியவருகின்றது. குறித்த புலி உறுப்பினர் தப்பிச்செல்வதற்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டு இவர்கள் மேல் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றது.
இலட்சக்கணக்கான ரூபா பணத்தை பெற்றுக்கொண்டு புலி உறுப்பினர் தப்பிச் செல்வதற்கு உதவியுள்ளதாக இவர்கள் மேல் சந்தேகிக்கப்படுகிறது. மேற்படி அதிகாரிகள் பற்றி பொறுப்புக் கூறவேண்டியவர்களுக்கு அறிவிக்க உள்ளதாக சிறைச்சாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருக்கின்றார். தப்பிச் சென்ற புலி உறுப்பினர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் நீண்டகாலம் மேற்கொண்ட திட்டத்தின் அடிப்படையில் குறித்த புலி உறுப்பினர் தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Design Your Site For Low Cost

YOUR ADVERTISE HERE