Home » » ஈரான் மீதான தடையிலிருந்து இலங்கைக்கான விலக்களிப்பு காலம் நீடிப்பு!- அமெரிக்கா

ஈரான் மீதான தடையிலிருந்து இலங்கைக்கான விலக்களிப்பு காலம் நீடிப்பு!- அமெரிக்கா

Written By EGK NEWS on Wednesday, June 5, 2013 | 5:58 AM

ஈரான் மீதான தடையிலிருந்து இலங்கைக்கான விலக்களிப்பு காலத்தை அமெரிக்கா நீடித்துள்ளது. ஈரானுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஈரானுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் நாடுகளுக்கு எந்தவிதமான சலுகைகளையும் வழங்குவதில்லை என அமெரிக்கா அறிவித்திருந்தது.
சில நாடுகளுக்கு அமெரிக்கா விலக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இலங்கை, இந்தியா, சீனா போன்ற சில நாடுகளுக்கு அமெரிக்கா இந்த சலுகையை வழங்கியுள்ளது.
இதன்படி, ஈரானிடமிருந்து எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு விலக்களிக்கப்பட்ட காலம் மேலும் ஆறு மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Design Your Site For Low Cost

YOUR ADVERTISE HERE