ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் மீது பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம்! 4 மாணவர்கள் கைது!!
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டிருந்த எதிர்ப்பு நடவடிக்கையை பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டு கலைத்துள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில்
இரண்டு பொலிஸார் காயமடைந்துள்ளதாகவும், கொழும்பு பதுளை பிரதான வீதியின்
பம்பஹின்ன பகுதியை மறித்து மாணவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதால்
போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment