Home » , » ஜூலை 1ல் விஜயகாந்த் ஆஜர் ! நாகர்கோவில் கோர்ட் உத்தரவு !!

ஜூலை 1ல் விஜயகாந்த் ஆஜர் ! நாகர்கோவில் கோர்ட் உத்தரவு !!

Written By EGK NEWS on Tuesday, June 4, 2013 | 7:26 PM

நாகர்கோவில் : நாகர்கோவில் கோர்ட்டில் விஜயகாந்த் மீதான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. வரும் ஜூலை 1ம் தேதி விஜயகாந்த் கோர்ட்டில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.
நாகர்கோவில் நாகராஜாதிடலில் கடந்த சில மாதங்களுக்கு முன் தே.மு.தி.க., பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்று பேசிய தே.மு.தி.க. ,தலைவர் விஜயகாந்த் தமிழகமுதல்வரை அவதூறாக பேசியதாக அரசு வக்கீல் ஞானசேகர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த ஏப்.,27ல் விசரணைக்கு வந்த போது, விஜயகாந்த் ஆஜாராகவில்லை. இதனையடுத்து ஜூன் 4ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். இந்நிலையில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால் விஜயகாந்த் ஆஜராகவில்லை. ஆனால் தே.மு.தி.க., வக்கீல் பொன்.செல்வராஜன் தலைமையில் 2மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஒரு மனுவில் சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது.ஆதலால் ஆஜராகவில்லை எனவம், மற்றொரு மனுவில்வாய்தா கேட்கப்பட்டது. இதனையடுத்து அரசு வக்கீல் ஞானசேகர் விஜயகாந்த்க்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிடவேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனையடுத்து நீதிபதி சின்னராஜ் அடுத்த விசாரணையில் கண்டிப்பாக விஜயகாந்த் ஆஜராக வேண்டும் என வரும் 1ம் தேதி வழக்கை ஒத்தி வைத்தார்

0 comments:

Post a Comment

Design Your Site For Low Cost

YOUR ADVERTISE HERE