Tuesday, May 28, 2013

எம்.பி மகேஸ்வரனின் மைத்துனரின் வர்த்தக நிலையத்தில் கொள்ளை - கொழும்பு கோட்டை அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் சம்பவம்!

கொழும்பு கோட்டை அதியுயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள முன்னாள் எம்.பி. மகேஸ்வரனுடைய மைத்துனரின் வர்த்தக நிலையம் இனந்தெரியாதோரால் சுமார் ஒரு கோடி ரூபாய் பணம் மற்றும் ஒன்றரைக் கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களும் பல்வேறு முக்கிய ஆவணங்களும் கொள்ளையிடப்பட்டுள்ளன. நேற்று இரவு பதினொரு மணிக்கும் நேற்று அதிகாலை ஒரு மணிக்கும் இடையில் இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனஎனக் கூறப்படுகிறது. இதேவேளை கொள்ளையடிக்கப்பட்ட குறித்த பயண முகவர் நிலையத்தின் பிரதான நுழைவாயில் கதவுகளுக்கு எதுவித சேதமும் இடம்பெறவில்லை.
கடையினுள்ளேயே உடைப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இதனால் குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் சந்தேகங்கள் நிலவுகின்றன.
  
இது குறித்து கோட்டை பொலிஸாரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, பயண முகவர் கொள்ளை சம்பவம் தொடர்பிலான முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுக்கின்றனர். மேலும் சந்தேகத்தின் பெயரில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற கடைத் தொகுதி மறைந்த முன்னாள் எம்.பி மகேஸ்வரனுக்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment